Wednesday, January 19, 2011

பதினாறு....16 ?

"பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என் வாழ்த்துவது நம் மரபு. இதற்கு பதினாறு மக்கட் செல்வம் பெற்று பெருவாழ்வு வாழ்க என பொருள் கொள்வோரும் உண்டு. பதினாறு பிள்ளைகளைப் பெற்ற பின்பு எப்படி பெருவாழ்வு வாழ்வது. அரசன் கூட ஆண்டி ஆகிவிடுவான்.


புகழ், கல்வி, வெற்றி, மக்கட்பேறு, துணிவு, செல்வம், மிகுந்த தானியம், சுகம், இன்பம், அறிவு, அழகு, புதிதுபுதிதாக ஏற்படக்கூடிய சிறப்புக்கள், அறவுணர்வுடைய குடிப்பிறப்பு, நோயற்ற வாழ்வு, நீண்ட வயது ஆகியவைகளே பதினாறு பேறுகள் ஆகும். இருந்தாலும் இவற்றினுள் சிறந்த பேறாகக் கருதப்படுவது மக்கட்பேறாகும்.

புதிய ஏழு உலக அதிசயங்கள்

அதிசயம்இருப்பிடம்பிம்பம்
சிச்சென் இட்சாமெக்சிகோவின் கொடியுகட்டான், மெக்சிகோஎல் காஸ்டிலோ மீது சுற்றுலாப் பயணிகள் ஏறுகிறார்கள்
மீட்பர் கிறிஸ்துபிரேசிலின் கொடிரியோ டி ஜெனிரோ, பிரேசில்
ரியோ டி ஜெனிரோவில் உள்ள மீட்பர் கிறிஸ்து
கொலோசியம்இத்தாலியின் கொடிரோம், இத்தாலிஅந்திசாயும் பொழுதில் கொலோசியம்: சிறந்த வகையில் பாதுகாக்கப்பட்ட பிரிவின் புறத் தோற்றம்
சீனப் பெருஞ்சுவர்சினாவின் கொடிசீனாகுளிர்காலத்தில் பெருஞ்சுவர்
மாச்சு பிச்சுபெரு கொடிகுஸ்கோ, பெரு
Machu Picchu (மாச்சு பிச்சு)வின் தோற்றம்
பெட்ராயோர்தானின் கொடிஜோர்டான்
பெட்ராவில் உள்ள கருவூலம்
தாஜ் மஹால்இந்தியாவின் கொடிஆக்ரா, இந்தியாதாஜ் மஹால்
பட்டியலில் ஒன்று மதிப்புமிக்கது என்னும் கவுரவ அந்தஸ்தை கொண்டது: கிசா பிரமிடு வளாகம்
(உலகின் பழைய அதிசயங்களில் எஞ்சியிருக்கும் இறுதியானது)
எகிப்தின் கொடிகெய்ரோ, எகிப்துபிரமிடு கியோப்ஸ்

 





 MjpNfrtg;ngUkhs; Jiz
GJkidg; GFtpoh miog;gpjo;
  md;GilaPh; epfOk; kq;fsfukhd tpf;Ujp tUlk; ijkhjk; 24-k; ehs; (07.02.2011) jpq;fl;fpoik  cj;ul;lhjp el;rj;jpuKk; rJh;j;jp jpjpAk; rpj;jNahfKk; $ba RgNahf Rgjpdj;jpy; fhiy 5.00 kzpf;FNky; 6.00 kzpf;Fs; kfu yf;fpdj;jpy;
 <NuhL khtl;lk;, gthdp tl;lk;, mk;khNgl;il nkapd; NuhL, Kfhrpg;GJ}hpy;
Gjpjhf fl;bapUf;Fk; nfshp ,y;yk; GJkidg; GFtpohtpw;F

- ,q;qdk; -
M.ngUkhs;nul;bahh; - P.nfshp
A.P.ntq;flhryk;
[Spac Tapioca Products (I) Ltd,.Poonachi]
V.ru];tjp - Pacl—Field Officer
V.S.uf;rdh - V.S.`hp`ud; - Kfhrpg;GJ}h; (G+dhr;rp)

md;Gld; miof;fpNwhk;.  

அமெரிக்க அதிபர் ஒபாமா ...


ஹவாய் பல்கலைக்கழகங்களில் ஒன்றில் புலமைப்பரிசில் பெற்றிருந்த கென்யா நாட்டைச் சார்ந்த முஸ்லிம் தந்தைக்கும் ‘கான்ஸஸ்’ விடுதியைச் சேர்ந்த வெள்ளைக்கார தாய்க்கும் 1961 ம் ஆண்டு ஹவாய் நகரத்தில் ஒபாமா பிறந்தார்.
பிறந்து இரண்டு வருடங்களில் பெற்றோர்களுக்கிடையில் விவாகரத்து ஏற்பட்டதன் காரணமாக தாய்வழிப் பாட்டியிடத்தில் வளர்ந்த ஒபாமா அவர்களது பாரம்பரிய இனத்தைச் சார்ந்தவர் எனும் காரணத்தினால் கிடைத்த புலமைப் பரிசிலைக் கொண்டு வெள்ளைக்கார தனவந்தர்களின் பிள்ளைகள் மாத்திரம் படிக்கும் ”பூனாஹோ’ பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றுக் கொண்டார்.
கல்வி :-
பின்பு 1979ம் ஆண்டு ”நியூயோர்க்கின்’ கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இணைந்து பட்டம் பெற்ற இவர் ”சிகாகோ’ மாநிலத்திற்குச் சென்று அங்கிருந்த பிரபல கிருஸ்த்தவ மதகுருவான ”கிரீமாயா’ அவர்களுடன் இணைந்து பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டார்.
பின்பு ”ஹார்பார்ட்’  பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான பட்டப்படிப்பைத் தொடர்ந்த இவர் 1991ம் ஆண்டு அமெரிக்காவின் பிரபல சட்ட சஞ்சிகையான ”ஹார்பார்ட்’ டின்  முதல் பிரதம ஆசிரியராக கடமையாற்றினார்.
இக்காலப் பகுதியிலேயே திருமணம் செய்து கொண்ட ஒபாமா அவர்கள் பின்பு மீண்டும் ”சிகாகோ’  திரும்பி மதகுருவோடு இணைந்து சமூகப்பணிகளை மேற்கொண்டதுடன் சிவில் வழக்கறிஞராகவும் சிகாகோ  பல்கலைக்கழகத்தின் சட்ட விரிவுரையாளராகவும் தொழில் புரிந்தார்;.

சானியா மிர்சா

1986 [1] ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி பிறந்த சானியா மிர்சா (உருதுப் பெயர் ) ஒரு இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரராவார். இவர் டென்னிஸ் விளையாடும் தொழிலை 2003ம் ஆண்டு தொடங்கினார். 2004ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசால் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிர்சா இந்திய பிடேறேஷன் கோப்பை குழுவில் சேர்ந்து அனைத்து மூன்று ஒற்றையர்கள் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றார். 2003ம் ஆண்டில் நடந்த விம்பிள்டன் மகளிர் இரட்டையர் விளையாட்டில் ரஷ்யாவை சேர்ந்த அலிசா க்லேய்போனவுடன் ஜோடி சேர்ந்து விளையாடி பட்டம் பெற்றார்.
மகளிர் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனைகளில் மிர்சா இந்தியாவிலிருந்து ஒற்றையர் விளையாட்டில் 27ம் தர வரிசையிலும் இரட்டையர் விளையாட்டில் 18வது தர வரிசையிலும் அடைந்து,மிக அதிகப் படியான தர வரிசையில் இடம் பெற்றவராவார். அவர் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் விளையாட்டுப் போட்டித் தொடரில் இந்தியாவில் முதல் பெண்மணியாக வித்திட்ட நற்பெயரை கொண்டுள்ளார். அதற்கு முன்பு சனியா கிராண்ட் ஸ்லாம் தொடரில்2005ம் ஆண்டு நடந்த யு.எஸ் திறந்த வெளிப் போட்டியில் மஷோன வாஷிங்க்டன், மரியா எலேனா கமேரின் மற்றும் மரியான் பார்டோலி ஆகிய மூவரையும் வென்று நான்காம் சுற்றை அடைந்த முதல் இந்திய பெண்மணியாவார். 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியா திறந்த வெளி கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியிடம் ஜோடி சேர்ந்து விளையாடி கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணியாவார்.
மிர்சா 2005ம் ஆண்டு ஆஸ்திரேலியா திறந்த வெளி போட்டியின் சாம்பியனான செரீனா வில்லியம்சிடம் தோற்று மூன்றாவது சுற்றில் வெளியேறினார். 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் நாள் ஹைதராபாத் திறந்தவெளி இறுதிப் போட்டியில் உக்ரைனை சேர்ந்த அல்யோன போண்டறேங்கோவை தோற்கடித்து டபிள்யு டி எ வின் ஒற்றையர் பட்டதை பெற்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். செப்டம்பர் 2006ம் ஆண்டு வரை மூன்று மிகப்பெரிய வெற்றிகளை பின்வரும் வீராங்கனைகளான, ச்வேத்லேன குச்நேத்சொவ, நாடிய பெட்ரோவா மற்றும் மாற்றின ஹிங்கிசை எதிர்த்துப் பெற்றார். 2006ம் ஆண்டு நடந்த தோஹா ஆசிய விளையாட்டுகளில் மிர்சா மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளியையும் மற்றும் கலப்பு ரெட்டையர் பிரிவில் லியாண்டர் பெயசிடம் ஜோடி சேர்ந்து தங்கத்தையும் வென்றார். இவர் அதில் அணி சார்ந்த போட்டியில் வெள்ளிக் கோப்பை பெற்ற இந்திய மகளிர் அணியின் ஒரு அங்கத்தினராகவும் இருந்தார்.
2006ம் ஆண்டு இந்தியாவின் நான்காவது உயர்ந்த சமூகம் சார்ந்த கௌரவ விருதான பத்மஸ்ரீ பட்டம், டென்னிஸ்[6] துறையில் மிர்சாவின் பங்கிற்கு வழங்கப்பட்டது.
மிர்சாவிற்கு 2007ம் ஆண்டு கடினமிக்க கோடை பருவத்தில் நடந்த யு.எஸ் திறந்த வெளி தொடர் நிலை போட்டியில் எட்டாம் இடத்தைப் பெற்று தனது டென்னிஸ் துறையில் மிகச் சிறந்த போட்டி முடிவை அடைந்தார். இவர் பாங்க் ஆப் தி வெஸ்ட் கிளாசிக் இறுதி சுற்றை அடைந்து ஷகார் பீருடன் ஜோடி சேர்ந்து இரட்டையர் போட்டியில் வென்று டயர் 1 அகூரா க்ளாசிக் கால் இறுதி போட்டியை அடைந்தார்.
2007ம் ஆண்டு நடந்த யு.எஸ் திறந்த வெளி போட்டியில் கடந்த சில வாரங்களில் மூன்றாவது முறையாக அண்ணா சக்வேத்சிடம் தோற்று மூன்றாம் சுற்றை அடைந்தார். இவர் சற்று சிறப்பாக கலப்பு இரட்டையர் போட்டியில் தனது கூட்டாளியாகிய மகேஷ் பூபதியுடன் கால் இறுதிக்கும் மகலியா இரட்டையர் போட்டியில் பெதனீ மட்டேக்குடன் ஜோடி சேர்ந்து இரண்டாம் நிலையிலுள்ள லிசா ரய்மொந்து மற்றும் சமந்தா ச்டோசூர் இருவரையும் வெற்றி கொண்டதையும் சேர்த்து மகளிர் இரட்டையர் கால் இறுதி போட்டியை அடைந்தார்.
இவர் பீஜிங்கில் 2008ம் ஆண்டு நடந்த கோடை ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இந்தியாவின் சார்பில் விளையாடினார். இங்கு செக் குடியரசை சேர்ந்த இவேட பெநேசொவிடம் 1-6, 1-2 என்ற நிலையில் தோற்கும் தருவாயில் ஒற்றையர் பிரிவில் தனது 64வது சுற்றில் ஒய்வு பெற்றார். அதில் இரட்டையர் பிரிவில் சுனிதா ராவுடன் ஜோடி சேர்ந்தார். அவர்கள் 32ம் சுற்றில் சுலபமாக அடைந்தாலும் ரஷ்யாவை சேர்ந்த ஜோடிகளான ச்வேத்லேன குழ்னேடசொவ மற்றும் டிநர சபினா இவர்களிடம் 4-6, 4-6 என்ற நிலையில் 16ம் சுற்றில் தோற்றனர்.

சச்சின் டெண்டுல்கர்


சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்(Marathi:सचिन रमेश तेंडुलकर) (Sachin Ramesh Thendulkar, பிறப்பு - ஏப்ரல் 24, 1973) தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவார். தனது 16ஆவது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே; வரையறுக்கப்பட்ட ஓவர் அனைத்துலகப் போட்டிகளில் (LOI) அதிகபட்சமாக இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற பெருமையும் டெண்டுல்கரைச் சேரும். இதுவரை கிரிக்கெட் விளையாடிய அனைத்து மட்டையாளர்களிலும் டெஸ்ட் போட்டிகளில் பிராட்மனுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில் ரிச்சர்டுசுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் 2002 -இல் விசுடன் குழுமம் வெளியிட்ட தர வரிசை அறிவிக்கின்றது.[1] இந்தியாவில் இரண்டாவது உயரிய குடிமுறை விருதான பத்ம விபூஷண் விருதையும் விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் இவர் பெற்றுள்ளார்.

காந்தியின் வாழ்க்கை வரலாறு

1869ல் குஜராத் மாநிலம் போர்பந்தரில் ஒரு ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர் மோகன்தாஸ்கரம்சந்த் காந்தி. பன்னிரண்டாவது வயதில் பார்த்த ‘அரிச்சந்திரா’ நாடகம், அவருக்குள் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. விசுவாமித்திரர் நடத்திய சோதனைகளை எல்லாம் ‘மன உறுதியால் தாங்கிக் கொண்டேன்’ என நாடகத்தில் அரிச்சந்திரன் சொன்னதைக் கேட்டு, உண்மையை மட்டுமே பேசும் புதிய மனிதராக மாறினார். அவர் மன உறுதி மற்றும் நேர்மையை வெளிநாடுகளில் படிக்கச் சென்றபோதோ அல்லது கடும் நோயுடன் மரணப் போராட்டம் நடத்திய போதோ எப்போதும் கைவிட்டதேயில்லை. ஒரு வழக்கறிஞராக தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றவர் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்ற வழக்குகளைவிட, நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்த்துவைத்த வழக்குகள்தான் அதிகம். தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த நிறவெறியும் அடக்குமுறையும் காந்தியை ஒரு போராட்டக்காரராக மாற்றியது.
போராட்டம் என்றால் வெட்டு, குத்து என்று ரத்தம் சிந்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் உலகிலேயே முதல்முறையாக ‘அஹிம்சை’ போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். “ஆயுதம் கொண்டு தாக்குவதைவிட, எதிரியின் முன் மனஉறுதியுடன் நின்று சாத்வீகமாக போராடுவது தான் உண்மையான வீரம். எதிரியிடம் காட்ட வேண்டியது எதிர்ப்பை மட்டுமே தவிர, வன்முறையல்ல” என்ற காந்தியின் அஹிம்சை போராட்டத்தை ஆரம்பத்தில் கிண்டலும் கேலியும் செய்தார்கள். ஆனால் இந்த கோட்பாடுதான் சிதறிக்கிடந்த இந்திய சுதந்திரதாகத்தை ஒன்று சேர்த்து வலிமையாக்கியது. அதிக எண்ணிக்கையில் பெண்களை சுதந்திரப் போராட்டத்தில் இணைத்தது. ஆனாலும் இந்த போராட்டத்தின் வெற்றி குறித்து சந்தேகங்கள் எழும்போது, “மன உறுதியுடன் போராடினார், வெற்றி நிச்சயம்” என்று உறுதியுடன் சொன்னார் மகாத்மா காந்தி.
1930ம் வருடம் 61 வயதான காந்தி உப்புக்கு வரி போட்ட ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து தண்டியாத்திரையை தொடங்கினார். 241மைல் தூரத்தை 24 நாட்களில் கடந்த காந்தி ஆயிரக்கணக்கான காவலர்கள் முன்னிலையில் தண்டியில் உப்பு எடுத்தார். நாடெங்கும் பல்வேறு தலைவர்கள் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள். காந்தியின் மன உறுதியையும் அஹிம்சையையும் பலத்தையும் கண்டு மக்கள் மலைத்து நிற்க ஆங்கிலேயர்கள் பயந்து போனார்கள்.
1947ம் வருடம் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால் இந்தியாவுக்கு கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் கிடைத்தது. இந்தியாவின் தலைமைப் பொறுப்பு தேடி வந்ததும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் தீண்டாமை, ஏழ்மை, மதக்கலவரம் போன்றவற்றுக்கு எதிராக மன உறுதியுடன் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தார்.
120 வயது வரை வாழ்ந்தால் மட்டுமே தான் நினைத்திருக்கும் எல்லா காரியங்களையும் செய்து முடிக்க முடியும் என்ற காந்திஜியை 78வது வயதில் மூன்று துப்பாக்கி குண்டுகளுடன் முடித்து வைத்தான் கோட்ஸே என்ற கொடியவன். காந்தி மறைந்தாலும், மனஉறுதி எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் வெற்றி உருவத்தில் அவரை தரிசிக்க முடியும்.

ஏ. பி. ஜெ. அப்துல் கலாம்


ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் ஆவுல் பகீர் ஜெனுலாபுதீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் 11-வது இந்தியக் குடியரசுத் தலைவராவார். இவரது பணிக் காலம் 2002-2007 ஆகும்.இவர் "இந்தியாவின் ஏவுகணை மனிதன்" என்றும் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் எறிகணைகள் வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் வான் எரிசுகள் வடிவமைப்பு, உருவாக்கம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு கருதியே அப்பெயர் பெற்றார். இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுத சோதனையான பொக்ரான்-II (1998) சோதனையில் முக்கியப் பங்கு வகித்தார். முதல் அணு ஆயுத சோதனை 1974-ல் நடத்தப்பட்டது. இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழுல்நுட்பக் கழகத்தின் (திருவனந்தபுரம்,கேரளா) வேந்தராகவும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் மைசூர் பல்கலைக்கழத்தில் வருகைப் பேராசிரியராகவும் இருந்து வருகிறார். மேலும் பல இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகை பேராசிரியர் போன்ற சிறப்பு நிலைகளில் உள்ளார்.

பக‌வ‌த் ‌கீதை...


இ‌ந்து ம‌க்க‌ளி‌ன் பு‌னித நூலாக‌க் கருத‌ப்படுவது பக‌வ‌த் ‌கீதையாகு‌ம். மகாபார‌த‌த்‌தி‌ல் நடைபெறு‌ம் குருஷே‌த்‌திர‌ப் போ‌ர் தொட‌ங்குவத‌ற்கு மு‌ன்ன‌ர் எ‌திர‌ணியை பா‌ர்வை‌யி‌ட்ட அ‌ர்ஜூன‌ன், அ‌ங்கே த‌ன் உற‌வின‌ர்க‌ள் பல‌ர் இரு‌ப்பதை‌க் க‌ண்டு போ‌ரிட மறு‌க்‌கிறா‌ன்.

அ‌ப்போது அ‌ர்ஜூனனை சமாதான‌ம் செ‌ய்த ‌அவரது தேரோ‌ட்டியான ‌கிரு‌ஷ‌்ண‌ர் (பா‌ர்‌த்தசார‌தி), நா‌ம் த‌ர்ம‌த்‌தி‌ற்காக போ‌ரிட வ‌ந்து‌ள்ளோ‌ம். அ‌ப்போது உறுவு முறைக‌ள் அ‌ங்கே குறு‌க்‌கிட‌க் கூடாது. ‌நீ உ‌ன் கடைமையை‌ச் செ‌ய்தாக வே‌ண்டு‌ம் எ‌ன்று கூறு‌கிறா‌ர். அ‌ப்போது ‌கிரு‌ஷ‌்ண‌ர் எடு‌த்து‌ச் சொ‌ல்லு‌ம் த‌த்துவ‌ங்களு‌ம், யோக‌ங்களு‌ம் அட‌ங்‌கிய நூ‌ல் தா‌ன் பகவ‌த் ‌கீதை.


அ‌தி‌ல் ‌கிரு‌ஷ‌்ண பரமா‌த்மா கூறு‌கிறா‌ர், யாரையுமஎதையுமவெறுக்காமலிருக்குமசமநோக்கஅல்லது ‌பிரு‌ம்ம உண‌ர்வு என்னுமமுடிவநோக்கிசசெல். இதுதானவேதங்களுமஉபநிடதங்களுமஇதிகாபுராணங்களுமஎண்ணற்பெரியோர்களுமமனிதனுக்குபபுகட்டுமமுடிந்முடிவாபடிப்பினை.

எவ‌ன் ஒருவ‌ன் எதனாலு‌ம் ம‌கி‌ழ்வ‌தி‌ல்லையோ, துயர‌ப்படுவ‌தி‌ல்லையோ, எதையு‌ம், யாரையு‌ம் வெறு‌ப்ப‌தி‌ல்லையோ, எத‌ற்கு‌ம் ஆசை‌ப்படுவ‌தி‌ல்லையோ, ந‌ல்லது கெ‌ட்டது இர‌‌ண்டையு‌ம் துற‌ந்த மன‌ம் கொ‌ண்டவனா‌ய் எ‌ன்‌னிட‌த்‌தி‌ல் ப‌க்‌தி கொ‌‌ள்‌கிறானோ அவனே என‌க்கு ‌பி‌ரியமானவ‌ன்.

மேலு‌ம் ‌கிருஷ‌்ண‌ர் கூறு‌கிறார‌், பகைவனையு‌ம் - ந‌ண்பனையு‌ம், புகழையு‌ம் - ப‌ழியையு‌ம், கு‌‌ளிரையு‌ம் - வெ‌ப்ப‌த்தையு‌ம், இ‌ன்ப‌த்தையு‌ம் - து‌ன்ப‌த்தையு‌ம் சமமாக‌க் கொ‌ள்பவனு‌ம் என‌க்கு ‌பி‌ரியமானவனே!

உடற்பயிற்சி-யோகா வேறுபாடு

உடற்பயிற்சி (Exercise) மற்றும் யோகா இரண்டுமே உடல் நலத்திற்காக அமைந்தது என்றாலும் இரண்டிற்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளது. முக்கிய வேறுபாடுகளை கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


உடற்பயிற்சி (Exercise)யோகா (Yoga)
உடல் சக்தி அதிக அளவு விரயமாகும் உடல் சக்தி விரயம் மிக மிக குறைவு. சக்தியை சேமிக்கும்
அதிக சக்தி விரயத்தால் அதிக உணவு சக்தி உடலுக்கு தேவை சாதாரண உணவு போதுமானது
செய்யும் போது தளர்ச்சியை கொடுக்கும் எப்போதும் உற்சாகத்தை கொடுக்கும்
அதிக நேரம் செய்ய வேண்டும் குறைந்தது 5 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை போதுமானது. அதிக நேரம் செய்தாலும் தவறில்லை
சில பயிற்சிகளை செய்ய அதற்கான கருவிகள் , அதற்கான இடம் தேவைப்படும் பிரத்யேகமாக எந்த கருவியும் தேவையில்லை
அதிகமாக வெளித்தசையை மட்டும் பலப்படுத்தும் உள் உறுப்புகளையும் பலப்படுத்தும்
உடல் கடினத்தன்மை பெறும் உடல் வளையும் தன்மையும் உறுதியும் பெறும்
செல்கள் வளர்வதை கூட்டி வயதை சீக்கிரம் அதிகமாக காட்டும் இளமையாக காட்டும்
முரட்டுத்தன்மை அதிகமாகி அது பழகிவிட்டதால் நாளாக நாளாக குறையத்துவங்கும். போட்டி குணம் பெருகும் உள்ளம் அமைதியாகி எந்நிலையையும் ஏற்கும் பக்குவம் பெறும். சாந்த குணம் வளரும்
அதிக வியர்வை வெளியாகும். வியர்வை வராது. அதனால் குளித்து விட்டும் செய்யலாம்.
உடல் உள் நோய்களை தடுக்கும் சக்தி அதிகமாக கிடையாது யோகா தேவையான எல்லா ஹார்மோன்களையும் தேவைக்கேற்ப சுரக்க வைப்பதால் நோய்தடுப்பு மருந்தாக விளங்குகிறது
இரத்த அழுத்தத்தை அதிகமாக்கும் இரத்த அழுத்தத்தை சமச்சீராக்கும்
கடினமாக செய்ய வேண்டும் எளிதாக செய்தே அதிக பலன் பெறலாம்
தொடர்ந்து செய்ய வேண்டும். இல்லையேல் கொழுப்பு அதிகரிக்கும். ஆண்களுக்கு தொந்தி வரும் எந்த கெடுதலும் இல்லை
வேறு கருவிகள் தேவைப்படுவதால் பணச்செலவு ஆகும் எவ்வாறு செய்வது என்பதை அறிந்து விட்டால் எந்த செலவும் இல்லை
உடல் திறன் மட்டும் பெருகும் உடல் திறனுடன் அறிவுத்திறன் மற்றும் ஞாபக சத்தி பெருகும்
மனதிற்கான பயிற்சி கிடையாது மனதிற்கான பயிற்சி உண்டு


ஒற்றுமைகள்
வேறுபாடுகளை பார்த்தது போல சில ஒற்றுமைகளையும் பார்ப்போம்

  • இரண்டு பயிற்சிகளுமே உடல் நலத்திற்கானது
  • சில குறிப்பிட்ட பயிற்சிகளை தக்க ஆசிரியரிடம் கற்காமல் செய்வது ஆபத்தானது
  • வெற்று வயிற்றுடன் செய்ய வேண்டும். சாப்பிட்ட உடன் செய்யக்கூடாது. அல்லது 4 மணி நேரம் கழித்தே செய்ய வேண்டும்
  • காலையும் மாலையும் இப்பயிற்சிகள் செய்ய உகந்த நேரம்
  • பயிற்சி செய்யும் போது எளிமையான உடை அவசியம்
  • நல்ல காற்றோட்டமான இடம் நல்லது
  • கர்ப்பிணி தாய்மார்கள் 3 மாதத்திற்கு பிறகு இப்பயிற்சிகளை செய்யக்கூடாது. அல்லது மிகமிக எளிமையானவற்றை மட்டும் மருத்துவர் ஆலோசனை படி செய்யவேண்டும்

சுகமான உடற்பயிற்சி...

சுகமான உடற்பயிற்சி...

மனிதனாகப் பிறந்தவன் தன்னை பிறரிடம் பிரகாசிக்கச் செய்வதற்காக என்னென்னவோ வழிமுறைகளை பின்பற்றுகின்றான். அதற்காக எந்தவிதமாக கடினவிடயங்களையும் தாங்கிக் கொள்ளக்கூடியவனாகவும் இருக்கின்றான். ஆனால் தன்னருகில் இருக்கின்ற சில விடயங்களை மறந்துவிடுவதுமுண்டு. அப்படி சிறந்த வழிமுறைகளில் ஒன்றுதான் செக்ஸ்!

'செக்ஸ்' என்ற வார்த்தையைக் கேட்டாலே தப்பான கண்டோட்டத்தில் பார்ப்பவர்கள்தான் அதிகம். ஆனால் அதனுடைய உண்மையை உணர்ந்தால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். மேலைத்தேய நாடுகளில் பாலியல் கல்விமுறை அமுல்படுத்தப்பட்டிருப்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்... (நாங்க மட்டும்தான் இன்னமும் எதையுமே வெளிப்படையாக பேசமுடியாமல் இருக்கிறோம்...). உண்மையிலேயே இந்த தாம்பத்யம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமானது. கணவன் மனைவி இருவரும் மனம்விட்டுப் பேசவேண்டும். கடமைக்கு வாழ்கின்றோம் என வாழ்வதால் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்பதை ஒவ்வொருவரும் மனதிற்கொள்ள வேண்டும். ஏனைய விடயங்களைப் பகிர்ந்துகொள்வதைப்போல் இந்த 'செக்ஸ்' விடயங்களையும் பகிர்ந்துகொள்வது கட்டாயமாகின்றது.

இந்த தாம்பத்ய விடயங்கள் பற்றி பல்வேறுபட்ட ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது இன்று நேற்றல்ல ஆதிகாலம்தொட்டு பல ஆய்வுகள் நடைபெற்று வந்திருக்கின்றன. அந்தவகையில் இப்போது விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்த ஆய்வுகளின் முடிவுகள் சிலதை அண்மையில் இணையத்தில் கண்டேன், உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

உடலுறவினால் எங்களுக்கு எப்படியான அழகியல் தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பதை முதலில் பார்ப்போம்.
* பெண்களுக்கு தலைமுடி பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்குமாம்.
* உடலுறவின்போது வெளியேறுகின்ற வியர்வையினார் மேனி பளபளப்பாக இருக்குமாம்.
* அதிகமாக காதலுணர்வு ஏற்படுவதனால் மேலதிக கொழுப்பு கரைக்கப்படுகிறதாம். இதனால் ஊழைச்சதை நீங்கி அழகுபெறுவீர்கள்.
* நீங்கள் நீச்சலில் ஈடுபடுகின்றபோது கிடைக்கின்ற உடலழகினைவிட 20 வீதம் அதிகமான அழகு உடலுறவினால் கிடைக்குமாம்.
* உடலுறவினால் மனவுளைச்சல் நீங்குவதால் உங்கள் முகம் எப்பொழுதும் பிரகாசமாக இருக்குமாம்.
* அடிக்கடி முத்தமிடுவதால் (உதட்டில்) பற்களுக்கு இனாமல் கிடைக்கின்றதாம். இதனால் பற்கள் பளபளப்பாக இருக்குமாம்.
* உடலுறவின்போது சுவாசம் அதிகரிப்பதனால் உடலுக்குக் கிடைக்கின்ற ஒட்சிசன் சீராகக் கிடைக்கின்றதாம். இதனால் உடற்பொலிவு ஏற்படுமாம்.

மேலேகூறிய விடயங்கள் உடலுறவினால் கிடைக்கின்ற அழகு சம்பந்தப்பட்ட விடயங்கள். இதேவேளை மருத்துவரீதியாகவும் பல நன்மைகள் கிடைக்கின்றனவாம். அதனையும் பார்ப்போம்...
* உடலுறவினால் உங்களுடைய உடற்சமநிலை பேணப்படுகிறதாம். இதனால் ஹோமோன் சுரப்புகள் சீராக இடம்பெறுகிறது. இதனால்தான் "செக்ஸ்' என்பது சுகமான உடற்பயிற்ச்சி என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
* வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது உடலுறவு கொண்டால் இதயக் கோளாறுகள் 50 வீதமாகக் குறைக்கப்படுமாம்.
* நாளையதினம் ஏதாவது முக்கியமாக விடயம்பற்றி பேசவேண்டுமாக இருந்தால், இன்றைய தினம் உடலுறவு வைத்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதனால் உங்களில் கருத்தில் ஒரு திடம் இருக்குமாம். அதாவது மன உறுதியடையும் எனக் குறிப்பிடுகிறார்கள்.
* தினமும் உடலுறவு வைத்துக்கொண்டால் ஹீமோகுளோபினின் செயற்பாடு 30 வீதமாக அதிகரிக்குமென பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
* வயதானவர்கள் உடலுறவு அல்லது முத்தப் பரிமாற்றங்களை வைத்துக்கொண்டால் தேவையற்ற வருத்தங்களை தவிர்த்துக் கொள்ளலாமாம். அதாவது மூட்டு வருத்தம், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் குறைவடையுமாம்.
* உடலுறவின்போது இதயம் 80 தொடக்கம் 150 தடவைகள் துடிக்கிறதாம்... (சாதாரண சுகதேகிக்கு 72 தடவைகள் துடிக்கும்...). இதனால் இதயத்தினைச் சூழவுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்படுகிறதாம். ஆகையினால் மார்ப்படைப்பு வருவதற்கான வீதாசாரம் குறைக்கப்படுகிறது.
* உடலுறவின் ஒருபகுதி என்பது நீங்கள் 1கி.மீற்றர் தூரம் நடப்பதற்குச் சமனானது என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
* உடலுறவினால் இரத்தோட்டம் அதிகரிக்கிறது. இதனால் உங்களுடைய இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறதாம்.
* உடலுறவின்போது அதிகமாக மூச்சுவாங்குவதால் நாசித்துவாரம் சுத்திகரிக்கப்படுகிறதாம். இதனால் மூச்சடைப்பு போன்ற வியாதிகள் தவிர்க்கப்படுகிறது.
* மிகமுக்கியமாக அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்கின்ற பெண்களுக்கு மார்புப் புற்றுநோய் தொற்றுவது அரிதாம். ஆண்களுக்கும் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற வியாதிகள் வருவதில்லையாம்.

பார்த்தீர்களா... நாங்கள் பேசுவதற்கே தயங்குகின்ற "செக்ஸ்'இல் இத்தனை சிறப்பம்சங்கள் இருக்கின்றனவே... இதனால்தான் மருத்துவர்கள் Bedroom is the best Gym என்கிறார்கள். தினமும் உடலுறவு வைத்துக்கொள்ளாவிட்டாலும் அன்பாக பழகுங்கள். அடிக்கடி முத்தங்களை பரிமாறிக் கொள்ளுங்கள். இதனாலும் நல்ல பலன் கிடைக்குமென ஆய்வுகள் குறிப்பிடுகின்றன... (ம்ஹு... நாங்க பெருமூச்சு விடுறத தவிர வேற என்னதான் செய்றது...?).

சமையல் குறிப்பு...

தேவையான பொருள்கள்:
பயத்தம் பருப்பு – 1 கப்
பால் – 2 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 1 கப்
கேசரி பவுடர் (விரும்பினால்)
ஏலக்காய்
பச்சைக் கற்பூரம்
முந்திரி, பாதாம் வகைகள்
செய்முறை:
  • பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
  • பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவிடவும்.
  • குக்கர் திறக்கவந்ததும் சூட்டுடனே வெளியே எடுத்து,  நன்கு மசித்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சர்க்கரை, மசித்த பயத்தம்பருப்பு கலந்து கிளறத் தொடங்கவும்.
  • முதலில் சர்க்கரையால் நெகிழ்ந்து, பின் கலவை இறுக ஆரம்பிக்கும்.
  • சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து விடாமல் கிளறவும்.
  • நன்கு சேர்ந்து ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
  • இறக்குவதற்கு சற்றுமுன் கலர் (நான் சேர்க்கவில்லை.), ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், உடைத்த அல்லது நொறுக்கிய கொட்டைப் பருப்புகள் சேர்க்கவேண்டும்.
* பல தளங்களில் கோதுமை மாவு ஒரு பங்கு சேர்ப்பதாக இருக்கிறது. இது எனக்குச் செய்தி. ஒருவேளை இப்பொழுது திருமணம் மாதிரி பெரிய விசேஷங்களிலும் செய்வதால் அளவிற்காக கோதுமை மாவு சேர்க்கிறார்களா என்று தெரியவில்லை. எதற்கும் சேர்க்காமல் ஒருமுறை செய்துபார்த்து அதன் ஒரிஜினல் சுவையை அனுபவித்துவிட்டு விரும்பினால் மாவு சேர்த்தும் செய்யலாம் என்பது என் அக்கறை கலந்த ஆலோசனை.
*சுவையான கோதுமை அல்வா ரெடி!